மலைவாழ் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி மனு அளிப்பு!

Viduthalai
0 Min Read

அரசியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான இந்துக்கோட்டை,ஏணிபான்டா,ஈரிசெட்டிஏரி,குருபரப்பள்ளி,சாலிவாரம்,திப்பசந்திரம்,சந்தனப்பள்ளி,ஜவளகிரி,குடுமலைதொட்டி,கொப்பக்கரை,தொட்ட திம்னஹள்ளி,உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் மலைவாழ் மக்கள் சுமார் 80 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு பட்டா வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தளி சட்டமன்ற உறுப்பினரும்,இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுதலைவருமான டி.இராமச் சந்திரன் ஒசூர் சாராட்சியரை சந்தித்து மனு அளித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில குழு உறுப்பினர் மாதையன் உள்ளிட்ட மேற்கண்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *