ராஞ்சி, அக.5 – நாடு முழுவதும் 2.10.2025 அன்று முன் தினம் விஜயதசமி கொண்டாடப்பட்டது. விஜயதசமிக்கு மறுநாளான 3.10.2025 அன்று வட மாநிலங்களில் துர்கா சிலைகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப் பட்டன.
இந்நிலையில், ஜார்க் கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூர் மாவட்டம் ஹரி ஜன் பகுதியை சேர்ந்த சிலர் அப்பகுதியில் உள்ள நீர்நிலையில் துர்கா சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த மற்றொரு கும்பலுடன் தகராறு ஏற்பட்டது. சிலையை கரைத்து விட்டு அதே வழியில் திரும்பி வந்தபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கத்திக்குத்து தாக்குதலில் இளைஞர்கள் 7 பேர் படு காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.