புதுடில்லி அக்.4- ‘ஜே.இ.இ., – நீட்’ (JEE – NEET) உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் நிலவும் சிக்கல்களைக் களைய, நிபுணர் குழு வின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடி க்கை மேற்கொள்ள ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காகப் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, +2 முடித்த பின் நடத்தப்படும் இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காகப் பல மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பயிற்சி மய்யங்களில் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர்.
சில தனியார் பயிற்சி மய்யங்கள் மாணவர்களிடம் அதிக கட்டணங்களைப் பெற்று, உரிய முறையில் பாடம் நடத்தவில்லை எனப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நுழைவுத் தேர்வுகளில் உள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக ஆராய, கடந்த ஜூன் மாதம் ஒன்றிய கல்வி அமைச்சகம் ஒன்பது பேர் அடங்கிய ஒரு குழுவை அமைத்தது.
உயர்கல்விச் செயலர் வினீத் ஜோஷி தலைமையிலான இக்குழு அளிக்கும் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில், நுழைவுத் தேர்வுகளில் உள்ள சிக்கல்களைக் களைய ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
+2 பாடத்திட்டம் மற்றும்
தேர்வு முரண்பாடு
இது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நாட்டில் நடத்தப்படும் பெரும்பாலான நுழைவுத் தேர்வுகளை +2 முடித்த மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். இந்தத் தேர்வுகள் +2 பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்தே நடத்தப்படுகின்றன இருப்பினும், அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மாணவர் களுக்குச் சிரமமாக உள்ளது.
ஆகையால், +2 பாடத்திட்டத்தால், நுழைவுத் தேர்வுகளில் ஏதேனும் சிக்கல்கள் நிலவுகிறதா என்ற கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி வாரிய உறுப்பினர்கள், +2 பாடத்திட்டத்திற்கும், நுழைவுத் தேர்வுக்கும் பொருத்தமில்லாமல் இருப்பதாகத் தெரிவித்துள் ளனர். அது தொடர்பான தரவுகளை, ஒன்றிய அரசு சார்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தற்போது பரிசீலித்து பகுப்பாய்வு செய்து வருகிறது என்றும் அவர் கூறினார்.ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளின் முறை, தயாரிப்புச் சுமை மற்றும் +2 பாடத்திட்டத்தின் பொருத்தப்பாடு ஆகியவற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.