மத வெறியின் உச்சம் அயோத்தியை விட்டு முஸ்லீம்கள் வெளியேற வேண்டுமாம் பிஜேபி மூத்த தலைவர் வினய் கட்டியார் வெறிப் பேச்சு

1 Min Read

புதுடில்லி, செப்.27 அயோத்தியில் இருந்து 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார். அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த அவர் செய்தியாளர் கூட்டத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அயோத்தியில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இனி இங்கு தங்க உரிமை இல்லை. அவர்கள் விரைவில் வெளியேற வேண்டும். அண்டை மாவட்டங்களான கோண்டா மற்றும் பஸ்திக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் அயோத்தியில் இந்துக்கள் முழு உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடுவோம். பாபர் மசூதி அல்லது வேறு எந்த மசூதிக்கும் பதிலாக புதிய மசூதி அயோத்தியில் கட்ட அனுமதிக்கப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

அவரது இந்தப் பேச்சு, இந்திய சட்டத்தின் கீழ் வெறுப்புப் பேச்சு குற்றமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உ.பி.யில் சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மற்றும் கட்சியினர் கட்டியாரின் இந்த கருத்துக்கு அமைதி காக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் 2019 தீர்ப்பின்படி அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக புதிய மசூதி கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையும் வினய் கட்டியார் எதிர்த்து வருகிறார். கட்டியார் நீண்ட காலமாக ராம ஜென்மபூமி இயக்கத்துடன் தொடர்புடையவர். 1984-இல் விஸ்வ இந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்தை நிறுவிய அவர், ராமர் கோயில் கட்டும் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். கடந்த 2006, 2012-ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். 1992-இல் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இவர் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக இருந்தார். சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் 2020-ஆம் ஆண்டில் அவர் உட்பட 32 பேரை விடுவித்தது நினைவுகூரத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *