மலேசியா- சுங்கை பட்டாணியில் தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா!

1 Min Read

மலேசிய திராவிடர் கழகம் சுங்கை பட்டாணி கம்போங் ராஜா கிளை சார்பில் தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா கிளைத் தலைவர்
வ. கதிரவன் தலைமையில் 17.9.2025 அன்று கொண்டாடப்பட்டது. பத்துடுவா பெரியார் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பினாங்கு மாநில மேனாள் தலைவர் ராமன் ,கெடா மாநில மேனாள் தலைவர் பாலன் ,சமூக சேவையாளர் சுப்ரா ஆகியோர் தந்தை பெரியார் அவர்களின் சமுதாயப் பணிகளையும் அவருடைய பரப்பரையால் மலேசிய தமிழர்கள் கல்வியிலும் அதன் மூலம் வேலை வாய்ப்பிலும் சிறந்தவர்களாக வளர்ச்சி பெற்றதற்கான சூழலையும் நன்றி உணர்ச்சியோடு எடுத்துக் கூறினர். தந்தை பெரியார் படம் சிறப்பாக கழகக் கொடிகளோடு அலங்கரித்து வைக்கப்பட்டது. கிளைச் செயலாளர் முருகேசன், நெறியாளராக நின்று கூட்டத்தை ஒழுங்கு செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *