பெரியாரியல் பயிற்சி முகாமில் அதிக மாணவர்கள் கலந்து கொள்வதென கரூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

Viduthalai
2 Min Read

அரசியல்

கரூர், மே 29- கரூர் மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் 28.5.2023 அன்று மாலை 5 மணிக்கு முத்தலாடம் பட்டி கலை இலக்கிய அணி மாவட்ட அமைப் பாளர் இரா ராமசாமி இல்லத்தில் நடை பெற்றது. கரூர் கழக மாவட்ட தலைவர் ஆசிரியர் ப.குமாரசாமி அவர்கள் தலை மையில் இக்கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு,சேகர் கலந்து கொண்டு,  ஈரோட்டில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு தீர்மானங்கள் குறித் தும்,  தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, புதிய உறுப்பினர் சேர்க்கை, ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ இதழ் களுக் குச் சந்தா  சேர்த்தல்பற்றியும், புதிய நிர் வாகிகளை அறிவித்தும் சிறப்புரை நிகழ்த் தினார்.

நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தீர்மானங்கள்:

1), மே 13 அன்று ஈரோட்டில் நடை பெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர் மானங்களை  நிறைவேற்றி செயல்படுத் துவது என தீர்மானிக்கப்படுகிறது.

2), திராவிடர் கழகத்தின் சார்பில் நடை பெறும் பெரியாரியல் பயிற்சி முகாமிற்கு கரூரிலிருந்து அதிக  மாணவர்களை கலந்து கொள்ள செய்வதென தீர்மானிக் கப்படுகிறது.

3), வைக்கம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் ஒன்றியம் ஒன்றியமாக தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

4), கரூர் மாவட்ட அளவில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள், அளவில் பரப்புரையுடன் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

5). கரூர் மாவட்ட திராவிடர் தொழி லாளரணி தலைவராக ம, சதாசிவம் அவர்களும், செயலாளராக இரா.கார்த்திக் அவர்களும், மாவட்ட அமைப்பாளராக ராஜாமணி அம்மாள் அவர்களும் நிய மிக்கப்படுகின்றனர்  என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டவர் மாவட்ட செயலாளர் ம.காளி முத்து, கழக காப்பாளர்  வே.ராஜு, கலை இலக்கிய அணி அமைப்பாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் கட்டளை  

உ.வைரவன், ம.பொம்மன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் ம.ஜெகநாதன், நகர செயலாளர் ம.சதாசிவம், ச.ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்,  தி.அறிவழ கன், அரவக்குறிச்சி ஒன்றிய அமைப்பாளர் ம.பழனிச்சாமி, கரூர் ஒன்றிய கழக அமைப்பாளர் ரா.கவின், மாணவர் கழகம் காந்திகிராமம், இரா.பெருமாள் கிருஷ்ண ராயபுரம் ஒன்றிய அமைப்பாளர், அரசு காலனி, இரா.கிருஷ்ணன் கரூர் ஒன்றிய கழகச் செயலாளர், இரா.பெரியார் செல் வம் மாணவர் கழகம் செயலாளர், 

இரா.கார்த்தி கடவூர் ஒன்றிய செயலாளர்,  ஜெ.இலக்கியா, பெரியார் பிஞ்சு விக் னேஷ், இளைஞரணி, நிலவன் தந்தை பெரியார் சமூக காப்பணி தஞ்சை, 

இரா.முபாரக் திருச்சி, அலெக்சாண்டர் மாவட்ட இளைஞரணி தலைவர், ஆகி யோர் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியில் கரூர் நகர செயலாளர் ம.சதாசிவம் நன்றி உரை ஆற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *