நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் – தமிழ்நாடு அரசு ஆணை

Viduthalai
1 Min Read

அரசியல், தமிழ்நாடு

சென்னை,மே 29 – தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒன்றிய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், நரிக்குறவன், குருவிக் காரன் சமுதாயத்தை தமிழ் நாட் டில் 37-ஆவது இனமாக பழங் குடியினர் பட்டியலில் இணைத்து அறிவிக்கை வெளியிட்டது. 

அதைத் தொடர்ந்து, நரிக் குறவன், குருவிக்காரன் சமுதாயத் தினர், அனைத்து அரசமைப்பு, பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங் களைப் பெற தகுதியுடைய ஏதுவாக தமிழ்நாடு அரசால் ஆணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பழங்குடியினர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர்கள், சார் ஆட்சியர்கள் ஆகியோருக்கு நரிக்குறவன், குருவிக் காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு ஏதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படு கின்றன.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து பழங்குடியினர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நரிக் குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழை வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி வழங்க வேண்டும்.

ஏற்கெனவே மிகவும் பிற்படுத் தப்பட்டோர் ஜாதிச் சான்றிதழை மின்வடிவிலான முறையில் பெற் றுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு, புதிய மின் வடிவிலான ஜாதிச் சான்றிதழ் வழங்கு வதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். அட்டை வடிவி லான, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஜாதிச் சான்றிதழ் வைத்துள்ளவர்களின் ஜாதிச் சான்றிதழை ரத்து செய்து, பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக புதிய இணைய தொகுப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *