மலேசியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாத 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்து நான்கு நண்பர்கள் பலி

1 Min Read

கோலாலம்பூர், ஆக. 24- மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில், ஓட்டுநர் உரிமம் இல்லாத 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

கோலா லங்காட் மாவட்டத்தில் 23,8,2025 அன்று அதிகாலை இந்த விபத்து நடந்தது. காரில் பயணித்த ஆறு நண்பர்களும் 16 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என ‘China Press’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டிச் சென்ற சிறுவன் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார், பெரிய பள்ளத்தில் விழுந்து அங்கிருந்த கல்தூண் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், காரை ஓட்டிய சிறுவன் மற்றும் அவனது இரண்டு நண்பர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *