யோக்ய கார்த்தா, ஏப். 29- இந்தோனே சியாவில் குழந்தைகள் பராமரிப்பு மய்யத்தில் இருந்த 53 கைக்குழந்தைகளின் கைகால்கள் கட்டப்பட்டு துன்புறுத்தப் படும் காட்சிப்பதிவு இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. குழந்தைகள் பராமரிப்பு மய்யத்தை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். அறக்கட்டளையின் தலை வர், மேனேஜர் மற்றும் 11 பணியாளர்களை காவல்துறை யினர் அதிரடியாக கைது செய்த னர்.
இந்தோனேசியாவின் யோக்யகார்த்தா நகரில் பகல்நேரப் பராமரிப்பு மய்யம் ஒன்றில் சிறு குழந்தைகள், வெறும் டயப் பர்களுடன், கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில், நெரிசலான அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
யோக்யகர்த்தாவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் திட்டமிட்ட முறையில் குழந் தைகள் துன்புறுத்தப்படுவதை ஆவணப் படுத்துவது போல் தோன்றும் ஒரு வைரல் காணொலி, இந்தோனேசியா முழுவதும் பெரும் சீற்றத்தைத் தூண்டி, உடனடி குற்றவியல் விசாரணைக்கு வழிவகுத்துள்ளது. மனதை வருத்தும் இந்தக் காணொளி, காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், அப்பகுதிகளில் உள்ள குழந் தைகள் காப்பகங்களை நிர்வகிக்கும் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளில் உள்ள முக்கிய குறைபாடுகளையும் அம்பலப்படுத்தியுள்ளது.
30 நபர்களிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, யோக்யகர்த்தா காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக 13 சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்தக் குற்றச் சாட்டுகளைத் தொடர்ந்து, ஜாலான் பாகேலில் அமைந்துள்ள லிட்டில் அரேஷா குழந்தைகள் காப்பகத்தை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக மூடி சீல் வைத்தனர்.
பல்வேறு பகல்நேரக் காப்பக ஊழியர்கள் மற்றும் அதனை இயக்கும் அறக்கட்டளையின் தலைவர் ஆகியோர் அடங்கிய சந்தேக நபர்கள், காவல்துறையின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக யோக்யகர்த்தா காவல்துறையின் செய்தித் தொடர்பாளரான தலைமை ஆணையர் இஹ்சான் ஞாயிற்றுக்கிழமையன்று உறுதிப்படுத்தினார்.
“இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்; இது தொடர்பாக ஒரு குற்றவியல் விசாரணை தொடங்கப் பட்டுள்ளது. யோக்யகர்த்தா பெருநகரக் காவல்துறை 13 பேரைச் சந்தேக நபர்களாக அடையாளம் கண்டது; அவர்கள் அனைவரும் உடனடியாகக் காவலில் வைக்கப்பட்டனர். நமது குழந்தைகளைப் பாதுகாப்பதில் காவல்துறை உறுதியுடன் உள்ளது,” என்று இஹ்சான் தெரிவித்தார்.

