பொள்ளாச்சி, ஆக. 13- பொள்ளாச்சி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 10.8.2025 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது.
ஜெயக்குமார்
இக்கூட்டத்தில், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்தும், பெரியார் உலகம் நிதி திரட்டுதல், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது, விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குதல், செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பதின் அவசியம், இளைஞரணி சார்பில் துண்டறிக்கை விநியோகம், பெரியார் சமூக காப்பு அணியில் இளைஞர்கள் மாணவர்களை அதிகம் பங்கேற்கச் செய்வது, ஆசிரியர் அவர்களின் அளப்பரிய உழைப்பால் கிடைத்திட்ட பலன்கள் குறித்து கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்.
மாவட்ட காப்பாளர் பொள்ளாச்சி தி. பரமசிவம், மாவட்டச் செயலாளர் அ. ரவிச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் சு. ஆனந்தசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சி.சிவராஜ் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
மாவட்ட இளைஞரணி தலைவர் கு.கார்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ம.பிரவீன்குமார், நகரத் தலைவர் சு.வடிவேல், நகர செயலாளர் அ.நாகராஜ், தஞ்சைமாநகரத் துணைச் செயலாளர் இரா.இளவரசன், உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று கருத்துரை ஆற்றினர்.
மாவட்ட துணை தலைவர் ஆனந்தசாமி 2 விடுதலை சந்தாவும், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரவீன்குமார் 1 விடுதலை சந்தா என மூன்று சந்தாக்கள் வழங்கினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியிலும் கழக தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.
“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம்” என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நிதித் திரட்டி வழங்குவது என முடிவு செய்யப் பட்டது.
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவினை (செப் – 17 சமூகநீதி நாள்) மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில், கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துத் திராவிடர்களின் திருநாளாகக் கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.
குடும்பத்துடன் பங்கேற்க முடிவு
2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் – மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் மற்றும் செங்கல்பட்டு – மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கி நகரமெங்கும் மற்றும் புறவழிச்சாலை நெடுகிலும் சுவ ரெழுத்து மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
செப்டம்பர் 6,7 கோபிசெட்டிபாளை யத்தில் நடைபெறும் பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சியில் மாவட்டத்தி லிருந்து இளைஞர்கள் மாணவர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது .
ஆகஸ்ட் 17 தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு -மறைமலைநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு விளக்க பரப்புரை கூட்டத்தை மிக சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.