லக்னோ, ஆக.7- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வந்த அமைச்சர், உங்களுக்கு ஆசி வழங்க கங்கை நீர் உங்கள் வீடு தேடி வந்துள்ளது என்று பேசியது கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சமீப காலமாக பொறுப்பான வர்கள் பேசும் பேச்சுக்கள் பல சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அந்த வகையில் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர். அது பற்றிய விவரம் வருமாறு:-
வெள்ளப் பெருக்கு
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் கங்கைமற்றும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கான்பூர், பிரயாக் ராஜ், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அனுப்பி வைத்தார்.
அதன்படி கான்பூர்தேஹா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் நிவாரணம் வழங்கவும் மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத் சென்றார்.
சர்ச்சைக்குரிய பேச்சு
அங்கு அவர் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை செய் தார். அப்போது அவர் ஒரு பெண்ணிடம், கங்கை நதி உங்கள் கால்களை சுத்தம் செய்ய உங்கள் வீட்டுக்கே வந்துவிட்டது. கங்கை ஆசி கூற வந்துள்ளது. அதனை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று கூறினார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சையானது.
இது தொடர்பான காணொலி யும் வெளியாகி வைரலாகியது. இதனிடையே மற்றொரு காணொலி ஒன்றில், ஒரு பெண், கங்கையின் ஆசியை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவதுபோல் உள்ளது. அமைச்சர்க்கு பதில் அளித்து அந்த பெண் பேசினாரா? அல்லது வேறு யாருடனோ பேசியதா? என்ற விவரம் தெரியவில்லை.அந்த காணொலியும் தற்போது வைரலாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
இதனிடையே அமைச்சர் சஞ்சய் நிஷாந்தின் சர்ச்சை பேச்சுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷர்வேந்திர பிக்ரம் சிங். இது அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என்றார்.
அமைச்சர் சஞ்சய் நிஷாந்த் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அஜய் ராய், பாதிக் கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவந்த இடத்தில் இப்படியா பேசுவது. உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள் என்று பிரசாரம் செய்யும் அமைச்சர்கள், வெளிநாட்டு சொகுசுக் காரில் வலம் வருகிறார்கள். அவர்கள் அப்படித்தான் பேசு வார்கள் என்றார்.
அமைச்சர் விளக்கம்
தனது பேச்சு சர்ச்சையான தைத்தொடர்ந்து அமைச்சர் சஞ்சய் நிஷாந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நான் சாதாரணமாக பேசியது திசை திருப்பப்பட்டுள் ளது. நாங்கள் கங்கையை புனிதமாக கருதுவோம். அதற்காக நீண்ட தொலைவில் இருந்து கங்கையில் புனித நீராட செல்வோம். அப்படிப்பட்ட கங்கை வீட்டுக்கே வந்துள்ளது என்று சாதாரணமாகதான் கூறினேன்.
சில நாள்களுக்கு முன்பு பிரயாக்ராஜில் தனது வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீரை காவலர் ஒருவர் வணங்கி, அதில் நீராடி யதை பார்த்தோம். அதன் அடிப் படையில்தான் கூறினேன் என்றார்.
தற்போது இந்த விவகாரம் உத்தரப்பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.