ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் குறுவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம்

தத்தனூர், ஜூலை 30– பள்ளி  கல்வித்துறை  சார்பில்  குறுவட்ட  அளவிலான சிலம்பப் போட்டி  28.07.2025 அன்று  தத்தனூரில்  உள்ள  மீனாட்சி  ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட் பட்ட  பல்வேறு  எடைப் பிரிவுகளில் சுமார்  150  மாணவ மாணவிகள்  கலந்து  கொண்டனர். இதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டனர். இதில் முதல்  இடத்தை  15 பேரும்,  இரண்டாம்  இடத்தை  5  பேரும், மூன்றாம்  இடத்தை  ஒருவரும்  ஆக  மொத்தம்  21 பேர் சான் றிதழ் பெற்றுள்ளனர்.

முதலிடத்தைப்  பிடித்த  15  பேரும்  மாவட்ட  போட்டிக்கு  தகுதி  பெற்றுள்ளார்கள். போட்டியில் வென்ற வீர, வீராங்கனைகள்  மற்றும் பயிற்றுவித்த  சிலம்பம்  ஆசிரியர்  செல்வம், உடற் கல்வி ஆசிரியர்கள்  கே. ராஜேஷ் , ஆர்.ரவிசங்கர், மற்றும்  ஆர்.ரஞ்சனி ஆகியோரை பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள்ஆகியோர்கள்  வாழ்த்தினர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *