ஒரத்தநாடு, ஜூன் 13 கடந்த 7.6.2023 அன்று மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் ‘பெரியார் நாடு’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் ஒரத்தநாட்டில் ஒன்றிய நகர கழகத்தின் சார்பாக ‘விடுதலை’ சந்தா திரட்டும் பணி ஆர்வமுடன் துவக்கப்பட்டது.
கழகத் தோழர்கள் உற்சாகத்துடன் பெருமள வில் கலந்து கொண்டார்கள். பொதுமக்கள் ‘விடுதலை’க்கான சந்தா மகிழ்ச்சியுடன் வழங்கி னார்கள்.
89 ஆம் ஆண்டில் தடம்பதிக்கும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் ‘விடுதலை’க்கு சந்தா சேர்க்கும் பணியினை உரத்தநாடு கடைவீதியில் கழக மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர் சிங் தலைமையில், தலைமைக் கழக அமைப் பாளர் குடந்தை க. குருசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, பெரியார் வீர விளை யாட்டு கழக மாநில செயலாளர் நா. ராமகிருஷ்ணன், ஒன்றிய கழகத் தலைவர் த. ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம், ஒன்றிய அமைப் பாளர் பு.செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் அ. உத்திராபதி, மாவட்ட ப.க. துணைச் செயலாளர் ஆ.லட்சுமணன், மாவட்ட இளை ஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் க. மாரிமுத்து, நகர கழகத் தலைவர் பேபி ரெ. ரவிச்சந்திரன், நகர கழக செயலாளர் ரெ. இரஞ்சித்குமார், நகர கழக துணைச் செயலாளர் இரா.ராவணன், நகர இளை ஞரணி தலைவர் பேபி ரெ.இரமேஷ்,தெற்கு பகுதி கழக செயலாளர் க.சுடர்வேந்தன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு. குமரவேல், ஒக்கநாடு மேலையூர் கிளைச் செயலாளர் வீரதமிழன், ஒக்கநாடு மேலையூர் கிளை கழகத் தோழர்கள் பொறியாளர் ப. பாலகிருஷ்ணன், மா. தென்னகம், இரா.மகேஸ்வரன், வே.சக்திவேல், ஆ.ராசகாந்தி, மண்டலகோட்டை அ.செந்தில்குமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.