பூரி கோயில் தேரோட்டத்தில் மூவர் பலி பாதுகாப்பு குறைபாடு ஏற்கத்தக்கது அல்ல : ராகுல் கண்டனம்

1 Min Read

புதுடில்லி, ஜூன்.30– நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பூரி கோவில் நெரிசல் சம்பவம் குறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

பூரி ரத யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசல் கவலை அளிக் கிறது. பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.

நிவாரண பணிகளை விரைவு படுத்துமாறு ஒடிசா அரசைக் கேட்டுக்கொள்கிறேன். காங்கிரசாரும் உதவ வேண்டும்.துயர சம்பவம் என்பது தீவிர எச்சரிக்கை. இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும், கூட்டத்தை ஒழுங் குபடுத்துவதும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண் டும். மனித உயிர்களை பாதுகாப்பது மிக முக்கியமான பணி. இந்த பொறுப்பில் நிகழ்ந்த குறைபாடு ஏற்கத்தக்கதல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *