உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத உத்தரப் பிரதேச அரசு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு

1 Min Read

லக்னோ, ஜூன் 26 உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கைதியை பிணையில் விடுதலை செய்யாத உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியா பாத் சிறையில் உள்ள குற்றவாளி ஒருவருக்கு கடந்த மாதம் விசாரணை நீதிமன்றம் பிணை வழங்கியது. ஆனால், வழக்கின் துணைப் பிரிவை காரணம் காட்டி, கைதியை சிறை அதிகாரிகள் விடுவிக்கவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் அமர்வு, உத்தரப்பிரதேச சிறைத்துறை தலைமை இயக்குநர், சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

சிறைத்துறை தலைமை இயக்கு நர் காணொலி மூலமும், சிறை கண்காணிப் பாளர் நேரிலும் ஆஜராகினர். அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி கைதியை விடுவிக்க மறுத்ததற்கு நீதி பதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது போன்று எத்தனை பேர் இன்னும் சிறை யில் உள்ளனர் என கேள்வி எழுப்பினர்.
பின்னர், உத்தரப்பிரதேச சிறைத் துறை கண்காணிப்பாளருக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, அதனை 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *