ராகுல் காந்தி கடும் தாக்கு
போபால், ஜூன் 20 அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபா லில் நடந்த காங்கிரஸ் தொழிலாளர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி உரையாற்றினார்.
டிரம்பிடம் மோடி சரணடைந்துவிட்டார்
இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றும்போது கூறியதாவது:
“ஆபரேஷன் சிந்தூர் நடவ டிக்கைக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்திட்டதாக வாஷிங்டன் கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான தொலை பேசி அழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் சரணடைந்துவிட்டார்.
அமெரிக்க அதிபரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் போதும் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார். வரலாறு இதற்கு சாட்சி. இதுதான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் குணம். மற்றவர்களுக்கு அவர்கள் எப்போதும் தலைவணங்குகிறார்கள்.
1971 ஆம் ஆண்டில் வங்கதேச விடுதலைப் போரின் போது மேனாள் பிரதமர் இந்திரா காந்தி, ‘‘அமெரிக்காவின் கடற்படை வந்தாலும் நான் செய்ய வேண்டியதைச் செய்வேன்’’ என்றார். அப்போது அமெரிக்காவின் அச்சுறுத்த லையும் மீறி பாகிஸ்தானை இரண்டாக உடைத்தவர் இந்திரா காந்தி.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் சரணடையாது. அதற்கு காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோர் யாருக்கும் சரணடைந்தது கிடையாது. அவர்கள் வல்லரசு நாடுகளுக்கு எதிராகப் போராடுபவர்கள்.”
இவ்வாறு ராகுல் காந்தி உரை யாற்றினார்.