மேற்கு வங்கத்தில் நாய்களை அலங்கரித்து வழிபாடாம்

Viduthalai
1 Min Read

சிலிகுரி,நவ.13- விலங்குகளில், மனிதர் களின் சிறந்த நண்பர்களாக நாய்கள் உள்ளன. அவற்றிற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் பூஜைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் சிலிகுரி நகரில் குகுர் திகார் அல்லது குகுர் பூஜை என்ற பெயரில் நாய்களுக்கான கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. இதில், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வளர்ப்பு நாய்கள் என்றில்லாமல் தெரு நாய்களையும் காலையிலேயே குளிக்க வைத்து, அவற்றை அலங்கரித்து, சிறப் பாக சமைக்கப்பட்ட நிறைய உணவு களையும் வழங்கினர்.

இதுபற்றி விலங்குகளுக்கான உதவி மய்யத்தின் உறுப்பினரான பிரியா ராய் கூறும்போது, 

“அதிக உற்சாகத்துடன் குகுர் திகார் விழா கொண்டாடப்பட்டது.  தெரு நாய்களை நாங்கள் வழிபட்டோம். தெரு நாய்களுக்கு மதிப்பளித்து, உங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட இடங் களில் அவற்றுக்கு உணவளிக்க வேண் டும் என வேண்டுகோளாக நான் கேட்டு கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *