மலேசியா திராவிடர் கழக தேசிய மாநாடு ‘டத்தோ ச.த.அண்ணாமலை’ பெயரில் கல்வி நிதி தொடக்கம்

viduthalai
1 Min Read

கோலாம்பூர், ஜூன் 7 மலேசிய திராவிடர் கழகத்தின் 79ஆம் மூவாண்டுப் பேராளர் மாநாடு 1.6.2025 அன்று சிலாங்கூர், சைபர்ஜெயா,செமராக் அரங்கில் இடை காலத் தேசியத் தலைவர் பாரதி சாமிக் கண்ணு தலைமையில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கழகத்தில் அரும்பெரும் பணிகளை செய்து தொண்டாற்றிய முன்னோடிகள்  சிறப் பிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 22 மாணவர் களுக்கு கல்வி நிதி வழங்கப் பட்டது. இந்நிதிகளை கழகத்தின் தேசிய மகளிர் பிரிவுத் தலைவர் குமுதா சுப்பிரமணியம், தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் சோமசம்பந்தனார் பாண்டியன்  இணைந்து வழங்கினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

* மறைந்த மேனாள் தேசியத் தலை வர் டத்தோ ச.த.அண்ணாமலை பெயரில் கல்வி நிதி தொடங்கப்படும்.

* அடுத்தாண்டு கழகத்தின் 80ஆம் ஆண்டு என்பதால் கழகப் பணிகளுக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் பாடாற்றிய கழக முன்னோடித் தலைவர்கள் அடங்கிய வரலாற்று நூல் ஒன்று  மாநாட்டில் வெளியிடப்படும்.

* கழகத்தில் பெண்கள் பிரிவுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் மத் தியச் செயலவையை  விரிவாக்கம் செய் யும்   சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

*  இளைஞர் – மகளிர் பிரிவுக்கான தலைமைத்துவம் மற்றும் நிர்வாக பயிற்சிப் பட்டறைகள்  எல்லா மாநிலங் களுக்கும் விரிவுபடுத்தப்படும்

* பகுத்தறிவு, தமிழ்மொழி, தமிழ் பள்ளி, தமிழினம், பண்பாடு, தமிழில் பெயரிடுவது என்று தொடர் பணிகளை முன்னெடுத்து வரும் கழகத்தின் பணி களை தடையின்றி செயல் படுத்த அரசாங்க வழியாக ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் மலேசிய ரிங்கிட்  மானியம்   பெற வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில்  மூவாண்டுக் கான பொறுப்பாளர் தேர்வை தொழில் அதிபரும், தமிழ் பற்றாளருமான மவு லானா இக்மாத் அலி நடத்தி வைத்தார்.

2025 முதல் 2028ஆம் ஆண்டுக்கான  தேசியத் தலைவராக பாரதி சாமிக்கண்ணு (சிலாங்கூர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *