நேற்று (16.5.2025) காலை 10 மணிக்கு நாகர்கோவில் -கருங்கல்லில் பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராசுவை மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்ர மணியன், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோர் சந்தித்து புத்தகங்கள் வழங்கினர்.
11.7.2025 அன்று மாலை நாகர்கோவில் மாநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தை தொடங்கி வைக்க வருகை தருவதாகவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் பங்கேற்பது பெருமையளிப்பதாகவும் தெரிவித்தார்.