ஒரு விரல் புரட்சி’: டிஜிட்டல் முறையில் நடைபெற்ற மாணவர் மன்றத் தேர்தல்!

2 Min Read

திருச்சி, ஜூலை 6- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘ஒரு விரல் புரட்சி’: டிஜிட்டல் முறையில் கோலாகலமாக நடைபெற்ற மாணவர் மன்றத் தேர்தல்!

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,  01.07.2026 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற மாணவர் மன்றத் தேர்தல், மாணவர்களின் பங்களிப்பால் ஒரு விழாக் கோலத் தையே உருவாக்கியது. எதிர்கால இந்தியாவை வழிநடத்தப் போகும் இளம் தலைமுறையினருக்கு, ஜனநாயகத்தின் உன்னதத்தை உணர்த்தும் ஒரு களமாக இந்தத் தேர்தல் அமைந்தது.

ஒரு விரல் புரட்சி

இத்தேர்தலின் மிக முக்கியமான சிறப்பம்சம் ‘டிஜிட்டல் வாக்குப்பதிவு’ முறை ஆகும். காகித வாக்குகளுக்கு மாற்றாக, அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் வாக்களித்தது, பள்ளியின் கல்விச் சூழலில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்தது. இத்தகைய முன்மாதிரி முயற்சி, மாணவர்களுக்குத் தொழில்நுட்ப அறிவையும், தேர்தல் நடைமுறைகள் குறித்த தெளிவான பார்வையையும் ஒருசேர வழங்கியது.

ஜனநாயகத்தின் அடையாளமான ‘விரலில் மை வைக்கும்’ நிகழ்வு தொடங்கி, வாக்காளர் பட்டிய லில் பெயர் சரிபார்த்தல், ரகசிய வாக்குப்பதிவு என ஒரு பொதுத்தேர்தலில் என்னென்ன நடைமுறைகள் இருக்குமோ, அவை அனைத்தும் மிகுந்த நேர்த்தியுடனும், ஒழுக்கத்துடனும் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்கள் தங்கள் விரலில் மையைத் தீட்டிக்கொண்டு, பெருமிதத்துடன் வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வந்த காட்சி, அவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிய மனநிறைவை வெளிப்படுத்தியது.

தலைமைத்துவப் பண்பு

பள்ளியின் தலைமைப் பொறுப்புகளான மாணவத் தலைவர், துணைத் தலைவர், விளையாட்டுப் பிரிவின் கேப்டன் மற்றும் வைஸ் கேப்டன்கள் மற்றும் பள்ளியின் நான்கு முக்கிய அணிகளான (Red, Blue, Green, Yellow) ஆகியவற்றின் பொறுப்புகளுக்குக் கடும் போட்டி நிலவியது. மேலும், கல்விசார் மன்றங்கள் மற்றும் சமூக சேவை மன்றங்களின் (NCC, பசுமைப் படை, சாரண சாரணியர் இயக்கம், இளையோர் செஞ்சிலுவை மன்றம் உள்ளிட்டவை) செயலர் மற்றும் இணை செயலர் பொறுப்புகளுக்குப் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்கள் கொள்கைகளை முன்வைத்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

முன்மாதிரி தேர்தல்

பள்ளியின் முதல்வர் முனைவர் க. வனிதா, ஜனநாயக மரபைப் போற்றும் வகையில் முதல் வாக்கைச் செலுத்தித் தேர்தலைத் தொடங்கி வைத்தார். இது மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.

4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் ஜன நாயகக் கடமையை ஆற்றித் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்தினர்

டிஜிட்டல் புரட்சி மற்றும்
சீரிய ஒருங்கிணைப்பு

இந்தத் தேர்தல் நிகழ்வை, பள்ளியின் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் களான  இ.அருண், மோ.கிருபா சங்கர், அ.அமலபிரகாஷ்,  ம.இரத்தினச்செல்வன் மற்றும் க.சிவராமக்கிருஷ்ணன் ஆகி யோர் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு ஒருங்கிணைத்தனர். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு முறையான தேர்தல் ஆணையத்தைப் போலவே இத்தேர்தலை முன்னின்று நடத்திய அவர்களின் பணி, பள்ளியின் நிர்வாகத் திறனுக்குச் சான்றாக அமைந்தது.

ஜனநாயக விழிப்புணர்வு

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஜனநாயக முறைகளை இணைத்து நடத்தப்பட்ட இந்த ‘முன்னோடித் தேர்தல்’, மாண வர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்தவர்களாகவும், வருங்காலச் சிறந்த வாக்காளர்களாகவும் வளர வித்திட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *