கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டம் அதிகாரிகளுடன் ஆலோசனை

2 Min Read

சென்னை, மே.15  டென்மார்க் நிறுவனத் துடன் இணைந்து தமிழ் நாட்டில் கடலுக்குள் காற்றாலை அமைப்பது தொடர்பாக சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கடலில் காற்றாலை

உலகம் முழுவதும் பல முன்னேறிய நாடுகளில் கடலில் காற்றாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் வங்கக் கடலில் காற்றாலைகளை அமைத்து, அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் முடிவில் தமிழ்நாடு அரசு இறங்கி உள்ளது. தமிழ்நாட்டின் கடல் பகுதிகளில் காற்று நிலையாக இருக்கும். இதனால் இந்தியாவிலேயே இங்கு தான் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை எளிதாக நிறைவேற்ற முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடலில் காற்றாலை அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான பின் இதற்கான அறிவிப்பு முறையாக  வெளியாகும். கட லில் காற்றாலை அமைப் பதற்கான தொழில் நுட்பம் இந்தியாவில் இல்லை. இதை டென்மார்க்கில் இருந்து கொண்டு வந்து இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் செயல்படுத்த உள்ளனர்.

 வேலைவாய்ப்புகள்

இதன் மூலம் தமிழ்நாடு மின் மிகை மாநிலம் ஆவதோடு, புதிய வேலை வாய்ப்புகளை இது உருவாக்கும். தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் இதனால் முன்னேற்றம் அடையும். கடலில் காற்றாலை அமைத்து, பெரிய ராட்சத குழாய்கள் மூலம் மின்சாரத்தை கரைக்கு கொண்டுவரும் திட் டமாகும். இதற்காக புதிய வகை காற்றாலைகளை உருவாக்க வேண்டும். விரைவில் இதற்கான பணிகள் தொடங்க இருக் கிறது.

தமிழ்நாட்டில் கடலுக் குள் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பாக டென்மார்க்கின் டேனிஷ் எனர்ஜி ஏஜென்சி, டென்மார்க் தூதரகம் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் இடையே உயர்மட்ட ஆலோசனை கூட்டம்சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் சார வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் (13.5.2025) நடந்தது. தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் டென் மார்க்கின் எரிசக்தி முகமையின் துணை இயக்குநர் ஸ்டைன் லெத் ரச்முசன், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் அனீஷ் சேகர், உலகளாவிய ஒத்துழைப்பு மய்ய சிறப்பு ஆலோசகர் டாக்டர் கரோலின் செஜர் டம்கார்ட் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *