செய்திச் சுருக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இன்னும் 5 நாள்களில்
மகளிர் உரிமைத் தொகை

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 15ஆம் தேதி 1.10 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு அரசு ரூ.1,000 டெபாசிட் செய்து வருகிறது. மேலும், அடுத்த மாதம் முதல் இந்தத் திட்டத்தில் புதிய பயனாளர்களை சேர்க்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த மாதத்திற்கான ரூ.1,000 இன்னும் 5 நாள்களில், அதாவது வருகிற 15ஆம் தேதி டெபாசிட் செய்யப்பட இருக்கிறது.

7 ஆண்டு சிறை தண்டனை

பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம்

சிறை தண்டனை பெற்ற மேனாள் அமைச்சரும் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ஜனார்த்தன் ரெட்டியை கருநாடக சட்டப்பேரவை தகுதி நீக்கம் செய்துள்ளது. சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக அவருக்கு சிபிஅய் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனையடுத்து, அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் அவரால் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

12ஆம் தேதி மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் பேச்சு: மிஸ்ரி

வருகிற 12ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரல்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரல்கள் இன்று மதியம் 3 மணியளவில் இந்திய அதிகாரிகளுடன் பேசியதாகவும், அதில் நிலம்,வான், கடலில் நேற்று மாலை 5 மணி முதல் சண்டை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *