தொடர் கிராமப்புறப் பிரச்சாரம் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

1 Min Read

திருவிடைமருதூர், மே 5- திருவிடைமருதூர் ஒன்றிய கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 01/05/2025 வியாழக் கிழமை மாலை 6 மணிக்கு திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசனது இல்லத்தில் மாவட்ட கழக தலைவர் வழக்கறிஞர் கு.நிம்மதி தலைமையிலும், பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர்  சு.விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

தீர்மானங்கள்:

இரங்கல் தீர்மானம் (திருவிடைமருதூர் ஒன்றியம் கல்யாணபுரம் பெரியார் பெருந்தொண்டர் இரா.ஜோதி மறைவிற்கும், திருநாகேஸ்வரம் மேனாள் தலைவர் மு.கோவிந்தராஜ் மறைவிற்கும் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றியம் முழுவதும் கழகக் கொடி ஏற்றுவது மற்றும் தொடர் கிராமப் பிரச்சாரம் செய்வது என  தீர்மானிக் கப்பட்டது.

திருவிடைமருதூர் ஒன்றியத்தில் உள்ள கழகத் தோழர்கள் இல்லத்தில் கழகக் கொடியை ஏற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை, உண்மை சந்தாகளை  புதுப்பிப்பதுடன் அதிக அளவில் விடுதலை சந்தாக்களை சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *