மனித உரிமைப் போராளி எல்.இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்!

Viduthalai
1 Min Read

அரசியல்

காட்டுமன்னார்குடி. ஜூலை 1- மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு குழு தலைவரும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் பாதுகாவலருமான எல். இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் காட்டுமன்னார்குடியில் 26.6.2023 அன்று மாலை 6:00 மணி முதல் 11 மணி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவள வன் தலைமையில் நடைபெற்றது.

 விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், காங் கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பி னர் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செய லாளர் கே பாலகிருஷ்ணன், இந் திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மணிவாசகம், ம.தி. மு.க. மாவட்ட கவுன்சிலர் எம்.எஸ். கந்தசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமை நிலைய செயலாளர் கனல் கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி ஹமீது சுல்தான், மனிதநேய ஜனநாயக கட்சி ஜாகிர் உசேன், தஞ்சை பேராசிரியர் திராவிடராணி, கடலூர் மாநகர  துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட விடு தலை சிறுத்தைகள் செயலாளர் அறவாழி செல்லப்பன், பசுமை வள வன், மணவாளன் மற்றும் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர். 

தமிழ்நாடு அரசு வேளாண் மற் றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் எல்.இளையபெருமாள் அவர்க ளின் நினைவை போற்றக்கூடிய விதத்தில் தமிழ்நாடு அரசு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் கள் நூற்றாண்டு நினைவரங்கம் சிதம்பரத்தில் அமைப்பது குறித்து நன்றி தெரிவித்து பாராட்டி பேசப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *