குஜராத் அரசின் மதவெறி!

1 Min Read

பக்ரீத் கொண்டாட்டத்தில் ‘குல்லாய்’ அணிந்து மாணவர்கள் நடனம்: பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்

கட்ச், ஜூலை 4- பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதி யில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பக்ரீத்தை முன்னிட்டு சிறிய அளவில் விழா கொண்டாடப் பட்டது. 

இந்த விழாவில் முஸ்லிம் மாண வர்களுடன் ‘குல்லாய்’ அணிந்து மற்ற மாணவர்களும் நடனமாடி யுள்ளனர். 

இதன் காட்சிப்பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி மத நல் லிணக்கத்தின் எடுத்துக்காட்டு என பாராட்டு குவிந்தது. 

ஆனால் மத வெறுப்பை வைத்தே குஜராத்தில் 23 ஆண்டு கள் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு, இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பள்ளியில் பக்ரீத் விழா நடத்தியது மற்றும் இசுலாமியர் அல்லாத மாணவர் களுக்கு ‘குல்லாய்’ அணிவித்தது மிகப் பெரிய குற்றம் எனக் கூறி  மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் சஞ்சய் பர்மர் மூலம்  அந்த தனியார் பள்ளியின் முதல்வரை பணியிடைநீக்கம் செய்துள்ளது. 

இதுகுறித்து கட்ச் மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் சஞ்சய் பர்மர், “இந்து மாணவர்களை முஸ்லிம்கள் அணியும் “இஸ்லாமிய குல்லா” அணியச் சொல்வது கீழ்த் தரமான செயல்” என ஒரே ஒரு கருத்தோடு மேற்கொண்டு எதுவும் கூறாமல் செய்தியாளர்களிடமி ருந்து நழுவிக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *