அம்பானியின் மகன் நடைப் பயிற்சி மேற்கொள்ள இசட் பாதுகாப்பாம்

1 Min Read

புதுடில்லி, ஏப். 6- இந்தியாவின் பெரும் பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10ஆம் தேதி கொண்டாடுவதை முன்னிட்டு, குஜராத்தின் துவாரகாவிலுள்ள கோவிலுக்கு நடந்தே செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் ஒவ்வொரு நாளும் இரவு சுமார் 10 கி.மீ. வீதம், குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து புறப்பட்டு துவாரகாவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், அவர் சுமார் 60 கி.மீ. தூரத்தை நடந்து கடந்துவிட்டார்.

இதனிடையே, அவர் நடந்து செல்லும் வழியிலுள்ள கோவில்களுக்கும் சென்று வழிபட தவறவில்லை. இப்படி தமது நடைப்பயணத்தின் இடையில் அவ்வப்போது இடைவெளிவிட்டு அதன்பின், நடைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

சாலையில் நடந்து செல்லும் அவருக்கு அச்சுறுத்தல் ஏதும் ஏற்படாமலிருக்க அவருக்கு பாதுகாப்புப் பணியில் இஸட் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, உள்ளூர் காவல் துறையினரும் அவருக்கு பக்கபலமாக நடைப்பயணத்தில் உடன் செல்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *