லக்னோ, ஜூலை 19 விடுதியில் அசைவ உணவு சமைப்பதற்குத் தடை விதித்து உத்தரப் பிரதேச மாநில கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது கண்டனத்திற்கு உள்ளானது.
இதையடுத்து மாணவர்கள் தங்களின் அன்றாட புரோட்டீன் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மீல் மேக்கர் (Soya Chunks), பன்னீர் மற்றும் சோயா பன்னீர் (Tofu) போன்ற சைவ உணவுகளை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த உள்ளதாம்.
உத்தரப் பிரதேச மாநில பல்கலைக் கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர் ஆனந்திபென் படேல், ஜூலை 13 அன்று கே.ஜி.எம்.யு பட்டமளிப்பு விழா வில் கலந்துகொண்டு, சில விடுதி உணவகங்களில் அசைவ உணவு பரிமாறப் படுவதாகக் கவலை தெரிவித்தாராம்.
அவரது கருத்துகள், அனைத்து விடுதிகளிலும் அசைவ உணவு தயாரிப்ப தற்குத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தூண்டியதுடன், அரசியல் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
கிங் ஜார்ஜ் மருத்துவப்
பல்கலைக்கழகம் நடவடிக்கையாம்
இதையடுத்து பல்கலைக்கழகத்தில் உள்ள 18 விடுதி உணவகங்களுக்கும் புரதச்சத்து நிறைந்த சைவ உணவைப் பரிமாற அறிவுறுத்தியுள்ளதாக கே.ஜி.எம்.யு. செய்தித் தொடர்பாளர் கே.கே. சிங் தெரிவித்து உள்ளாராம்.
