13.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* கோவில் திருவிழாவுக்கு ஒரு ஜாதியினர் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
* தொகுதிகளை குறைக்கும் பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை
* தொகுதி மறுவரையறை விவகாரம்; மு.க.ஸ்டாலினுக்கு சித்தராமையா ஆதரவு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* மசூதிகளை தார்பாலின் போட்டு மூடியதாம் உ.பி. அரசு. ஹோலி பண்டிகை ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கையாம், உ.பி. ஷாஜகான்பூரில் இந்த அவலம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ரயில்வேயில் தனியார் மயமாக்கல் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்ப்பு: “கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், ரயில் விபத்துகளால் 400 பயணிகளின் மதிப்புமிக்க உயிர்களை இழந்துள்ளோம், 2018 மற்றும் 2021 க்கு இடையில் பூஜ்ஜிய இறப்புகளுடன் ஒப்பிடும்போது. இது ஏன் நடக்கிறது? ஊழியர்களை தனியார்மயமாக்குவதால் இது நடக்கிறது, ”என மாநிலங்களவையில் திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ மற்றும் எம்பிக்கள் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* தொகுதி மறுவரையறையின் காரணமாக நாடாளுமன்ற தொகுதிகளை குறைப்பது அரசியல் ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் அநீதியானது மற்றும் கூட்டாட்சி கொள்கையை சீர்குலைக்கும்: சிபிஎம் கண்டனம்.
* ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறவில்லை. அறிவு உள்ளவர்கள் யாராவது மும்மொழி கொள்கையை ஏற்பார்களா? அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி.
தி இந்து
* மகாராட்டிரா அரசுத் தேர்வுகள் இனி மராத்தியில் நடத்தப்படும்:பிராந்திய மொழியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மகாராட்டிரா பணியாளர் ஆணையம் (எம்.பி.எஸ்.சி) ஏற்பாடு செய்யும் அனைத்து போட்டித் தேர்வுகளையும் மராத்தியில் நடத்த மகாராட்டிரா அரசு திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு.
* பி.எம்.சிறீ தொடர்பாக ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு எழுதிய கடிதத்தில், ஒன்றிய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் அல்ல, மாநில அரசு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே இந்தத் திட்டத்தை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது என்று தி.மு.க நாடாளுமன்ற கட்சித் தலைவரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
.- குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment