பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

viduthalai
4 Min Read

திருச்சி, பிப். 21 இந்திய சிலம்பாட்டக் கழகம், தமிழ்நாடு சிலம்பக் கழகம் மற்றும் சிறீவேலுத்தேவர் அய்யா அறக்கட்டளை இணைந்து நடத்திய மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அய்ந்தாம் வகுப்பு மாணவர்கள் ஆர்.ஹிர்த்திக் வாசன் மற்றும் ஆர்.தேவ் ஆகியோர் பங்கேற்று மாநில அளவில் மூன்றாம் இடமும் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

டேக்வேண்டோ

திருச்சி மாஸ் டேக்வேண்டோ குழுமமும், செயின்ட்.ஜோன் ஆஃப் ஆர்க் பன்னாட்டுப் பள்ளியும் இணைந்து நடத்திய, மாவட்ட அளவிலான டேக்வேண்டோ போட்டிகளில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவன் எஸ்.ஹரீஷ் , 37 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் முதலிடமும் தங்கப் பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவனைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

அபாகஸ்

ஜீ மேக்ஸ் கல்வியியல் நிறுவனம் மற்றும் ஜீ மேக்ஸ் அபாகஸ் பயிற்சி மய்யம் இணைந்து கும்பகோணத்தில் கடந்த 04.2.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று நடத்திய தேசிய அளவிலான அபாகஸ் நுண்ணறிவுப் போட்டியின், இளையோர் பிரிவில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவி கே.அய்ஸ்வர்யா பங்கேற்று தேசிய அளவில் மூன்றாம் இடமும் வெண்கலப் பதக்கமும் பெற்று பள்ளிக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.

யோகாசனம்

திருச்சி, யோகாசன விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு, திருவருள் குருகுல விளையாட்டு மற்றும் கலை ஆராய்ச்சி மையம் மற்றும் விவேகானந்தர் இளைஞர் மேம்பாட்டு மய்யம் இணைந்து நடத்திய மாநில அளவிலான யோகாசனப் போட்டிகளில், தனித்திறன் யோகாசனப் பயிற்சிப் பிரிவில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவன் வீ.பவனேஸ் பங்கேற்று மாநில அளவில் மூன்றாம் இடமும் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

சிறீநற்பவி யோகாலயா மற்றும் சிறீமத் ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய, மாநில அளவிலான இரண்டாம் ஆண்டு யோகாசனப் போட்டி கடந்த 15.2.2025 அன்று திருச்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவன் வீ.பவனேஸ் பங்கேற்று மாநில அளவில் மூன்றாம் இடமும் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

சிலம்பம்

தமிழ்நாடு

திருச்சி, நேரு நினைவுக் கல்லூரி, அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்புக் கலைகள் சங்கம் மற்றும் அரவிந்த் காவலர் பயிற்சி மையம் இணைந்து நடத்திய மாநில அளவிலான சிலம்பப் போட்டி, திருச்சி, புத்தனாம்பட்டியில், கடந்த 16.2.2025 அன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், ஏழாம் வகுப்பு மாணவி.எம்.தாரணி 15 வயதிற்குட்டோருக்கான, இளையோர் பிரிவில், நீள் கம்பு மற்றும் நடுக்கம்புப் போட்டிகளில் முதலிடத்தோடு தங்கப் பதக்கமும், இரட்டைக் கம்புப் போட்டியில் இரண்டாம் இடத்தோடு வெள்ளிப் பதக்கமும், வென்று அளப்பரிய சாதனை படைத்துள்ளார்.

மாணவி தாரணிக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

சதுரங்கம்

திருச்சி மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கம், ஸ்டார் சதுரங்க அமைப்பு மற்றும் இந்தியாவின் ஓவர்சீஸ் வங்கி இணைந்து, திருச்சி, ஜே.ஜே. பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில், கடந்த 8.2.2025 முதல் 11.2.2025 வரை நடத்திய, முதலாவது பன்னாட்டு சதுரங்கப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி

வி.சஹானா 15 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில், கலந்து கொண்டு பன்னாட்டு அளவில் முதலிடமும் தங்கப் பதக்கமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

சாதனை மாணவியைப் பள்ளி தாளாளர் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

திருச்சி மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கம் மற்றும் க்ராம்னிக் சதுரங்கப் பயிற்சி மய்யம் இணைந்து, நடத்திய 15 வயதிற்கு உட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டி, திருச்சி, விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் கடந்த 01/02/2025 மற்றும் 02/02/2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி வி.சஹானா கலந்து கொண்டு மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், வெண்கலப் பதக்கமும் வென்று வாகை சூடினார்.
வெற்றி பெற்ற மாணவியைப் பள்ளி தாளாளர் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *