பயனாளிகளுக்கு சேவைக் குறைபாடு! ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

2 Min Read

சென்னை, பிப்.6 முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஓய்வறை ஒதுக்க மறுத்த ரயில்வே நிர்வாகத்திற்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அப ராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

சென்னை புதுவண் ணையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மற்றும் கடலூர் பெரியகுப்பம் பெட்டோடையைச் சேர்ந்த ராமு ஆகியோர் சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

ஓய்வறை முன்பதிவு

அந்த புகாரில், “கடந்த 2019ஆம் ஆண்டு டில்லி, ஆக்ரா உள்ளிட்ட பல் வேறு இடங்களுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டபோது நிஜாமுதீன், அமிர்தசரஸ், சண்டிகர் ஆகிய மூன்று ரயில் நிலைய ஓய்வறைகளில் தங்கிக் கொள்வதற்காக முன்பதிவு செய்யப்பட்டது. அதன் படி, குறிப்பிட்ட தேதி யில் நிஜாமுதீன் ரயில் நிலையம் சென்று முன் பதிவு செய்திருந்த ஓய் வறையை ஒதுக்கித் தரும் படி அங்கிருந்த ரயில்வே பணியாளரிடம் கேட் டோம்.அதற்கு அவர், ஓய்வறை முன்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக கணினியில் எந்த பதிவும் இல்லை எனத் தெரிவித்து அறையை ஒதுக்க மறுத்து விட்டார். இதனால், நாங்கள் வேறு வழியில்லாமல் ரயில்வே நடைமேடையில் படுத்து ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த புகார் மீதான விசாரணை ஆணை யத்தின் தலைவர் கோபி நாத், உறுப்பினர் ராம மூர்த்தி அடங்கிய அமர்வில் (பிப்.5) விசார ணைக்கு வந்தது. அப்போது, தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட பொது மேலாளர் தரப்பு, “ஏதாவது ஒரு காரணத்தினால் ஓய்வறை ஒதுக்க முடியாமல் போனால், அதற்கான தொகையை திரும்ப வழங்க விதி உள்ளது. அதன்படி, ஓய்வறைக்காக செலுத்தப்பட்ட தொகை திரும்ப வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அபராதம்

அனைத்து வாதங்களை யும் கேட்ட சென்னை நுகர் வோர் குறைதீர் ஆணைய தலைவர், “அடுத்தகட்ட ரயில் பயணத்தை எளி தாக மேற்கொள்வதற்கு வசதியாகவே ரயில் நிலைய ஓய்வறையை பயணிகள் தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, மனுதாரரைப் பொறுத்தவரை ரயில் நிலைய ஓய்வறையை முன்கூட்டியே பதிவு செய்திருந்தார்.

ஆனால், அவருக்கு அறை ஒதுக்கப்படாததால் மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளார். ரயில்வே நிர்வாகத்தின் இந்த சேவை குறைபாடு மனு தாரர்களுக்கு மன உளைச்சலை ஏற் படுத்தி இருப்பதால், மனு தாரர்களுக்கு இழப்பீடாக 25 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாயும் சேர்த்து தென்னக ரயில்வே வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இதேபோல, பாதிக்கப் பட்ட மேலும் 7 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஆணையம், அவர்களுக்கும் இழப் பீடாக மொத்தம் 90 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்க தென்னக ரயில்வேக்கு உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *