ஜெயங்கொண்டம், பிப். 2- நேற்று (01.02.2025) ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பதினொன்றாம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவிகள் வழங்கிய பிரியா விடை விழாவினை முதல்வர் இரா. கீதா தலைமையில் மிகவும் கோலாகலமாக கொண்டாடினர் இவ்விழாவில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள்,இரு பால் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பதினொன்றாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் நடனம், மவுன மொழி, வகுப்பறை அரட்டைகள் நாடகம்,பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தி அனைவரையும் மகிழச் செய்தனர். பாட ஆசிரியர்கள் மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் இன்னிசையோடு பாடல் பாடினர்.
பதினொன்றாம் வகுப்பு மாணவி தன்னுடைய உரையில், பனிரண்டாம் வகுப்பு அக்கா, அண்ணன்கள் எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும்நண்பர்களாகவும், முன்னுதாரணமாகவும் அனைத்து செயல்களிலும் எங்களுக்கு ஊக்கம் அளித்தனர். என்று மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொண்டார் .
ஆசிரியர்கள் அனைவரும் கையொப்பமிட்ட டி ஷர்ட் மற்றும் மாணவர்களின் பெயர் எழுதப்பட்ட சாவிக்கொத்தினை 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கி மாணவர்களை மகிழ்வித்தார்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவர்கள் எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை பெரியார்பள்ளியில் பயின்றது குறித்து மிகவும் பெருமைப்படுகிறோம் எனவும், கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மாணவர்களாக எங்களை உருவாக்கிய முதல்வர் அவர்களுக்கும், இருபால் ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். அத்துடன் தங்களின் நினைவுப் பரிசாக ஸ்டீல் பீரோவை பள்ளிக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
இந்த அழகான நினைவுகள் என்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும். விழாவிற்கு இசைவளித்த பள்ளியின் தாளாளர் அவர்களுக்கும் இந்த அறிய வாய்ப்பினை அளித்த முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.