துறையூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

1 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

துறையூர், ஜூலை 17– திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை துறையூர் சாமி திருமண மண்டபத்தில் 16-07-2023 அன்று மிக எழுச்சியுடன் நடை பெற்றது.

77 மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

“தந்தை பெரியார் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் – வழக்குரைஞர் பூவை.புலிகேசி வகுப்பு எடுத்தார். 

“பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு” என்ற தலைப்பில் – கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வகுப்பு எடுத்தார்.

“தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்” என்ற தலைப்பில் – கழக துணைப் பொதுச் செயலாளர்  ச.பிரின்சுஎன்னாரெசு பெரியார் வகுப்பு எடுத்தார்.

“சமூக ஊடகங்களில் நமது பங்கு” என்ற தலைப்பில் – பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா. அழகிரிசாமி,  திராவிடர் கழக தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வி.சி. வில்வம் வகுப்பு எடுத்தார்கள்.

“தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்” என்னும் தலைப்பில் – வழக்குரைஞர் பூவை.புலிகேசி வகுப்பு எடுத்தார்.

“தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச்சிந்தனைகள்” என்னும் தலைப்பில் முனைவர் மு.சு.கண்மணி வகுப்பு எடுத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *