காரணம் இது பெரியார் மண்!

Viduthalai
1 Min Read

கருஞ்சட்டை

சிறுமிகளைத் ‘தானமாக’க் கொடுப்பது, சாமியார்களின் உதவியாளர்களாக இளம் பெண்களை வாடகைக்கு அமர்த்தி வருவது போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைத் தடுக்கவேண்டிய ஒன்றிய அரசும், உத்தரப்பிரதேச அரசும் மத நம்பிக்கை என்ற பெயரில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் உள்ளனர்.
இப்படி சிக்கிக்கொண்ட சிறுமிகளை அவ்வளவு பெரிய மனிதக் கூட்டத்திலும் தேடிச்சென்று சில இளம்பெண் சமூக ஆர்வலர்கள், காப்பாற்றப் போராடுகின்றனர்.
இப்படிப் போராடும் பெண்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதோடு, ஸநாதன விரோதி, ஹிந்து விரோதி போன்ற பட்டங்களும் சங்கிக்கூட்டங்களால் கொடுக்கப்படுகிறது.

அப்படி இருந்தும், ‘‘உங்கள் அக்கா, தங்கையை இப்படி சாமியார்களோடு அனுப்பி வைப்பீர்களா? அதற்கு உங்க அப்பா, அம்மா ஒத்துக்கொள்வார்களா?’’ என்று எதிர்க்கேள்வி கேட்டு பெண்களை மீட்கப் போராடுகின்றனர் அந்த சமூக ஆர்வலர்கள்.
இவை எல்லாம் குழந்தைகள் நல அமைப்பு, மகளிர் நல வாரியம் மற்றும் காவல்துறையினரின் பணிகள் ஆகும். ஆனால், அவர்களோ நம்பிக்கை என்ற பெயரில் சிறுமிகள் சீரழிக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கின்றனர்.
என்னதான் பக்தி வெள்ளம் புரண்டு ஓடினாலும், தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க முடியுமா?
பக்தியில் குளித்து மூழ்குபவர்கள்கூட இவற்றை அனுமதிப்பார்களா? மாட்டார்கள்.
காரணம், இது தந்தை பெரியார் மண்!

கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் சாமியார்களின் பிடியிலிருந்து சிறுமிகளை மீட்கப் போராடும் பெண் சமூக ஆர்வலர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *