மோடிஜியின் முரண்பாடு! – கருஞ்சட்டை

Viduthalai
1 Min Read

தனியார் நேரலை உரையாடலில் பேசிய மோடி நானும் சாதாரண மனிதன் தான், தன்னாலும் தவறுகள் நடக்கும் என்று கூறியுள்ளார்.

10.01.2025 அன்று அவர் கூறியது,
எல்லோரும் எதையும் செய்துவிடும் ஆற்றல் படைத்தவர்கள் அல்ல, நானும் கூட, நான் சாதாரண மனிதன்தான், . நானும் தவறு செய்யலாம். தவறு செய்வது மனித இயல்பு. நானும் மனிதன் தான். கடவுள் கிடையாது.
இதே மோடி கடந்த ஆண்டு (23.05.2024) என்ன பேசினார்?

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி ஒன்றில், ‘‘தான் மனிதப் பிறவி அல்ல என்றும், தன்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான் என்றும் ஏதோ ஒன்றை நடத்திக்காட்டவேண்டும் என்பதற்காக, ஒரு கருவியாக கடவுள் தன்னை இந்தப் பூமிக்கு அனுப்பினார் என்றும், இதை நான் எப்போது உணர்ந்தேன் என்றால், எனது தாய் இறந்த பிறகுதான்; நான் மனிதப்பிறவி அல்ல என்று உணர்ந்தேன். எனக்குக் கிடைத்திருக்கும் இந்த ஆற்றல் உலகில் எந்த சாதாரண மனிதருக்கும் கிடைக்கும் வாய்ப்பில்லை. நான் பார்த்ததும் இல்லை; கடவுளால் பூமிக்கு ‘அவதாரமாக’ அனுப்பப்பட்ட ஒருவருக்கு மட்டுமே சிறப்பான ஆற்றலைக் கொடுக்க முடியும்’’ என்றும் தன்னை பற்றி பெருமிதம் தெரிவித்தார்.
21.5.2024 அன்று பேசிய நரேந்திர மோடிக்கும், 10.1.2025 அன்று உதிர்த்த மோடிக்கும் இடையில்தான் எத்துணை வேறுபாடு என்பதைவிட, எத்தகைய முரண்பாடு. உண்மையைக் காப்பாற்றுவது எளிது!

ஆனால், ஒரு பொய்யைக் கடைசிவரை காப்பாற்றுவது கடினம் என்பது விளங்குகிறதா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *