சேடக்குடிக்காடு ஜெயலட்சுமி அம்மையார் படத்திறப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

செந்துறை, ஜன. 30- அரியலூர் மாவட்ட கழகத் தலைவர்விடுதலை. நீலமேகனின் தாயார் ஜெயலட்சுமி அம்மையாரின் படத்திறப்பு நிகழ்ச்சி 28.1.2024 ஞாயிறு அன்று காலை 11 மணியளவில் செந்துறை சேடக்கு டிக்காட்டிலுள்ளஅவரது இல்லத்தில் நடைபெற்றது.
தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் தலைமை யேற்க ,காப்பாளர் சு. மணிவண் ணன், மாநில இ.அ.து.செயலாளர் சு.அறிவன், உறவினர்கள் சா.அருள் மணி, சா. வீரமணி ஆகியோர் முன் னிலை வகிக்க, மாவட்ட இணைச் செயலாளர் ரத்தின. ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.பொதுக் குழு உறுப்பினர் சி. காமராஜ் மறைந்த அம்மையாரின் படத் தினை திறந்து வைத்தார்.

திராவிட முன்னேற்ற கழக கொள்கை பரப்பு துணைச் செயலா ளர் ச.அ.பெறுநற் கிள்ளி ,மாநில ப.க. அமைப்பாளர் தங்க . சிவ மூர்த்தி மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், பேராசிரியர் அருள், வஞ்சினபுரம். மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் க.தன பால், மாவட்ட துணை செயலாளர் பொன். செந்தில்குமார் வழக்குரை ஞர் சா. பகுத்தறிவாளன்ஆகியோர் அம்மையாரின் உதவும் குணம், உழைப்புத்திறன், மாவட்ட தலை வர் நீல மேகனின் தொண்டுக்கு துணையாக நின்றது குறித்தும் தமிழ் சமூகம் அடைய வேண்டிய வளர்ச்சி குறித்தும் விளக்கி நினை வேந்தல் உரையாற்றினார்கள்.மாவட்ட தொழிலாளர் அணி தலை வர் தா. மதியழகன் இணைப்புரை வழங்கினார்.செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா. செல்வகுமார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் இரா திலீபன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் லெ.தமிழரசன், மாவட்ட ப.க ஆசிரியரணி அமைப் பாளர் வி.சிவசக்தி,மா. இ.அ.து. தலைவர் மு.ரஜினிகாந்த், ,மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு. ராஜா,தொழிலதிபர் ராஜா. அசோகன்,செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்செல்வன் செந்துறை ஒன்றிய அமைப்பாளர் சோ.க.சேகர், செ.ரகுபதி குழுமூர் சுப்பராயன், பொன்பரப்பி சுந்தர வடிவேலு, பெரியாக்குறிச்சி திரு மால், மாவட்ட தொழிலாளரணி நிர்வாகிகள் வெ.இளவரசன் சி. கருப்புசாமி, விவசாய அணி பொறுப்பாளர் பெ.கோ.கோபால்,
ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மா.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் துரை.பிரபாகரன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா. தமிழரசன் ஒன்றிய செயலா ளர் தியாக. முருகன் ஒன்றிய அமைப்பாளர் கோ.பாண்டியன் த.கு. பன்னீர்செல்வம், தா.பழூர் ஒன்றிய தலைவர் இர.ராமச்சந்தி ரன் ஒன்றிய செயலாளர் பி.வெங் கடாசலம் ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ் சேகரன், இரா.ராஜேந் திரன் உல்லியக்குடி சிற்றரசு, அரிய லூர் ஒன்றிய தலைவர் சி.சிவக் கொழுந்து ஒன்றிய செயலாளர் த.செந்தில், ஆட்டோ தர்மா, இளை ஞரணி தலைவர் க. மணிகண்டன், திருமானூர் ஒன்றிய தலைவர் க.சிற் றரசு, ஒன்றிய செயலாளர் பெ. கோபிநாத் அமைப்பாளர் சு.சேகர் முனைவர் சவுந்தர்ராஜன், உள் ளிட்ட கழக பொறுப்பாளர்களும் உறவினர்களும் நண்பர்களும் பங் கேற்று ஆறுதல் தெரிவித்தனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *