புதுடில்லி, செப் 16 இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளப் பக்கங் களில் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் தொடர்பான பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்கள் பரப்பப் படுவதாக ஒன்றிய அரசு, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு அண்மையில் அறிவிக்கை அனுப்பியிருந்தது.
அரசு அனுப்பிய இந்த அறிவிக் கையை தொடர்ந்து, மெட்டா நிறுவனம் தனது புகாரளிக்கும் நடைமுறையில் முக்கிய மாற்றத்தைக் கொண்டுவர முன்வந்துள்ளது. அதன்படி, இனி குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குற்றங்களை ‘இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மய்யத்தின்’ (I4C) இணையதளத்தில் நேரடியாகப் புகாரளிக்க மெட்டா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு முன்பாக, தனது தளங்களில் பதிவேற்றப்படும் குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் குறித்த விவரங்களை அமெரிக்காவில் செயல்படும் ‘காணாமல் போன மற்றும் சுரண்டப்படும் குழந்தைகளுக்கான தேசிய மய்யத்திற்கு’ (NCMEC) மட்டுமே மெட்டா நிறுவனம் புகாரளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மற்றும் மெட்டா நிறுவனத்தின் இந்த ஒப்புதல் மூலம், இந்தியாவில் குழந்தைகள் மீதான இணையவழி பாலியல் குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மீது இனி மிக விரைவாகவும் கடுமையான முறையிலும் சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
