ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்தவும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதம் ஆக உயர்த்தவும் வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி எஸ்டிபிஅய் கட்சி மாபெரும் பேரணி, பொதுக் கூட்டம் (சென்னை, 12.9.2026)

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம்

தமிழ்நாடு அரசு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்த வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி மாபெரும் பேரணியை எஸ்டிபிஅய் கட்சி நடத்தியது. எஸ்டிபிஅய் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நித்தியானந்தன் எம்.எல்.ஏ. (துணைப் பொதுச் செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), முனைவர் எஸ். ஷேக்முகைதீன், (மாநில தலைவர் – சிறுபான்மை பிரிவு, பாட்டாளி மக்கள் கட்சி), கே.கே.செல்வக்குமார், (நிறுவனர் தலைவர், தமிழர் தேசம் கட்சி), நாகை திருவள்ளுவன், (தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி), வழக்குரைஞர் எஸ்.பி. சிலுவை நாடார் (தலைவர், பனை நாடார் மகாஜன சங்கம்), ஜெகத் கஸ்பர், (நிறுவனர், தமிழ் மய்யம்), Dr. மா.வெங்கடேஷ் குமார், (தேசிய தலைவர், தேசிய சமூகநீதி கட்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *