கராத்தே மற்றும் Abacus போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரியார் கல்வி நிறுவனங்கள்

பெரியார் கல்வி நிறுவனங்கள்

திருச்சி, செப்.9- 9ஆம் வகுப்பு மாணவி எம்.யூ.வைஷ்ணவி கராத்தே (3rd Dojo Karate Championship Bodhi Dharmar) போட்டியில் 3ஆம் இடம் பெற்று கோப்பையையும், பதக்கத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

9ஆம் வகுப்பு எஸ்.நிவேதிதா, மாவட்ட அளவிலான Open கராத்தே வாகையர் பட்டப் (Championship) போட்டியில் குமைட் (Kumite)இல் முதல் பரிசையும், கலர் பெல்ட் (Colour Belt)இல் 3ஆம் பரிசையும் பெற்று கோப்பையையும், சான்றிதழையும் வென்றார்.

10ஆம் வகுப்பு மாணவி எஸ்.இனியாள், அபாகஸ் (RB Book of World Records – International World Record Certificate Abacus) போட்டியில் 5,55,000 கேள்விகளுக்கு 35 நிமிடத்தில் தீர்வு கண்டு சாதனைப்படைத்து கோப்பையையும், சான்றிதழையும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *