சென்னை, செப் 08- குறை பாடுகளற்ற ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்தி தனிநபர் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து சட்டப் பேரவைத் தலைவரிடம் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார்.
குறைபாடுகளுக்கு இடம் தராமல் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்றும், இதர பிறபடுத்தப்பட்ட மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்து தனிநபர் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து சட்டப் பேரவைத் தலைவரிடம் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (7.9.2026) கடிதம் அளித்துள்ளார்.
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் நோக்கமே பட்டியலினச் சமூக மக்களின் எண்ணிக்கையைப் போல, ஓபிசி மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் அவர் களது கல்வி, சமுதாய, பொரு ளாதார நிலைமையையும் அறிந்து கொள்வதுதான் என்பதால் ஒன்றிய, மாநில அரசுகளின் ஓபிசி ஜாதிகளின் பட்டியலை வைத்து, அதிலிருந்து மக்கள் ஜாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றி னால்தான் ஜாதிவாரிப் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
