கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

5.9.2026 சனிக்கிழமை
வடசென்னை மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5 மணி *இடம்: பெரியார் திடல்,  வேப்பேரி, சென்னை *தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *கருத்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *பெருள்: கழகத் தலைமைச் செயற்குழு அறிவிப்பின்படி தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் – கூட்டங்கள் – கழக ஆக்கப்பணிகள் *வருகை விழையும்: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்).

Contents
5.9.2026 சனிக்கிழமை வடசென்னை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்பேராசிரியர் கி.ஆழ்வார் மொழி பெயர்த்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இசையமுது- NECTAR OF MUSIC -நூல் வெளியீட்டு விழாகாரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்திருவள்ளூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்6.9.2026 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவாளர் கழகம்  குடந்தை 148ஆவது பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள் விழாபெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம்7.9.2026 திங்கள்கிழமை மன்னார்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்8.9.2026 செவ்வாய்க்கிழமை அரியலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல்10.9.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2615

பேராசிரியர் கி.ஆழ்வார் மொழி பெயர்த்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இசையமுது- NECTAR OF MUSIC -நூல் வெளியீட்டு விழா

சென்னை: மாலை 5 மணி *இடம்: தேவ நேயப் பாவாணர் அரங்கம்,அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, சென்னை * தலைமை: எம்.பி.கணபதி * நூல் வெளியிடுபவர்: ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா (உயர் நீதிமன்ற  நீதிபதி) * நூலைப் பெற்றுக்கொள்பவர்: ஏ.பத்மசிங் அய்சக் (ஆச்சி குழும நிறுவனர்) *வாழ்த்துரை & விழா ஏற்பாடு: பழைய மாணவர்கள், திருச்செந்தூர்  ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

காரைக்குடி மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி: மாலை 4.30 மணி*இடம்: குறள் அரங்கம், காரைக்குடி * தலைமை: ம. கு. வைகறை, மாவட்டத் தலைவர் *முன்னிலை : சாமி திராவிடமணி, மாவட்டக் காப்பாளர் * வரவேற்புரை: கொ.மணிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் * பொருள்: அறிவாசான் தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள் விழா, அமைப்புப் பணிகள், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல், மாவட்ட வரவு – செலவு அறிக்கைத் தாக்கல் * நன்றியுரை: இ.ப.பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் *திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் * அழைப்பு: சி. செல்வமணி, மாவட்டச் செயலாளர்.

திருவள்ளூர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திருத்தணி: காலை 10 மணி *இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்தணி *வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) *தலைமை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்டக் கழகத் தலைவர்) *கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, கழக வளர்ச்சி செயல்பாடுகள், கழக ஆக்கப்பணிகள், விடுதலை நாளிதழ் சந்தா சேர்த்தல் *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிரணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

6.9.2026 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம்  குடந்தை 148ஆவது பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள் விழா

குடந்தை: மதியம் 2 மணி *இடம்: பெரியார் மாளிகை, உள் அரங்கு கூடம், குடந்தை *10,11,12 வகுப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேசுப் போட்டி *தலைப்பு: என்றும் தேவை பெரியார், பெரியார் பெண்ணுரிமைச் சிந்தனைகள், பெரியார் எனும் உலக தலைவர் – ஏதேனும் ஒரு தலைப்பில்…

பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம்

ஈரோடு: மாலை 5.55 மணி *இடம்: பெரியார் மன்றம், ஈரோடு *வரவேற்புரை: கவிதா நந்தகோபால்  *தலைமை: அனிச்சம் கனிமொழி *முன்னிலை: கண.குறிஞ்சி, மா.சு.ராதாகிருஷ்ணன் *சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *பங்கேற்போர்: ஆ.செந்தில்குமார் (மாவட்டத் துணைச் செயலாளர், திமுக) *நன்றியுரை: ஆனந்தலட்சுமி.

7.9.2026 திங்கள்கிழமை
மன்னார்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மன்னார்குடி: மாலை 6.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: 17.9.2026 தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குதல்  *வேண்டல்: கழகத் தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கெண்டு சிறப்பிக்கவும் *இவண்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டக் கழகத் தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர்)

8.9.2026 செவ்வாய்க்கிழமை
அரியலூர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல்

அரியலூர்: மாலை 6 மணி *இடம்: சிவக்கொழுந்து இல்லம், அரியலூர் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *கருத்துரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) *முன்னிலை: சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) *பொருள்: தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா, தலைமை செயற்குழுத் தீர்மானங்கள் செயல்படுத்துதல் *வேண்டல்: தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும் *இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்டக் கழகத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்).

10.9.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2615

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர்) *முன்னிலை: தென்.மாறன், ஜெ.ஜனார்த்தனன், வழக்குரைஞர் பா.மணியம்மை *சிறப்புரை: முனைவர் க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்) *தலைப்பு: தத்துவத் தலைவர் தந்த தகைசால் தமிழர் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *