வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு சென்னையில் ரூ.2,916.50-க்கு விற்பனை!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 1- பன்னாட்டு சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில், சமையல் எரிவாயு உருளை விலையானது ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியன்றும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், புதிய மாதத்தின் முதல் நாளான இன்று (செப்டம்பர் 1), சமையல் எரிவாயு உருளைகளின் புதிய விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

வணிக பயன்பாட்டு உருளை (19 கிலோ): சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான உருளை விலை ரூ.10.50 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக உருளை (14.2 கிலோ): பொதுமக்களின் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட உருளை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது வழக்கம்போல் ரூ.957.50-க்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வணிக பயன்பாட்டு உருளையின் விலை உயர்ந்துள்ளதால், உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் மத்தியில் சற்று கூடுதல் செலவினம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *