கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 31.8.2026

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* சிபிஎம் -விஹெச்பி விவகாரம்: வங்காளத்தில் துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற விஎச்பி-யின் கோரிக்கையை சிபிஎம் கடுமையாக எதிர்த்துள்ளது; உணவு தேர்வில் தலையிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

* ஆர்.எஸ்.எஸ். தலைவர் உபன்யாசம்:ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், அமெரிக்காவில் இந்தியர்கள் குறித்து வெளியான கருத்துகளைச் சுட்டிக்காட்டி, இந்தியாவில் இந்துக்கள்–முஸ்லிம்கள் இடையே பிரிவினையை தூண்டும் வகையில் பேசக்கூடாது என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

* உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான்:மாணவர்கள் கேள்வி கேட்பதற்கும் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் தண்டனை வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது; அது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். ஜனநாயகம் குறித்து: பலதரப்பட்ட கருத்துகளை மதித்து, சுதந்திரம், சமத்துவம், வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் பண்பை பல்கலைக்கழகங்கள் வளர்க்க வேண்டும்; கேள்வி கேட்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘இரட்டை வேடம்’: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் நாட்டில் பன்முகத்தன்மையை சகித்துக் கொள்ள முடியாதவர் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன; காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, அவர் “பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்” எனக் கூறினார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு: மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தொகுதி மறுவரையறை, பழங்குடியினரின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் எனக் கூறி, பேரணியின் முக்கிய கோரிக்கைக்கு சோரன் ஆதரவு தெரிவித்தார்.இருப்பினும், ஜார்கண்ட் பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணியில் முதலமைச்சர் சோரன் பங்கேற்கவில்லை.

* இதுதான் குஜராத் மாடல்? குஜராத்தில் 5 ஆண்டு களாக சிறுபான்மையினர் நலத் திட்டத்திற்கு நிதி இல்லை: PMJVK தகவல் 2021–2022 முதல் 2025–2026 வரை அய்ந்து ஆண்டுகளிலும் குஜராத்திற்கு பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் (PMJVK) நிதி எதுவும் விடுவிக்கப்படவில்லை; இதேவேளை, திட்டம் தொடங்கியதிலிருந்து 82 திட்ட அலகுகள் நிறைவு பெற்றதாக பட்டியலிடப்பட்டுள்ளன.

தி இந்து:

* என்.இ.பி. (NEP) 2020க்குப் பிறகு சுமார் 1 லட்சம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன: மாணிக் சர்க்கார் அதிர்ச்சித் தகவல்: தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 அமல்படுத்தப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

* ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் விலகுவார்கள்: 2029 மக்களவைத் தேர்தலில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் நிலைப்பாட்டை தவெக தொடர்ந்தால், ராகுல் காந்தியை ஏற்கா விட்டால் தானும் மற்றொரு காங்கிரஸ் அமைச்சரும் உடனடியாக பதவி விலகுவோம் என அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார் அதிரடிப் பேட்டி.

தி டெலிகிராப்:

* இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள்: பா.ஜ.க.வின் ‘திசைதிருப்பும் முயற்சி’ என ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி அமைப்புகள் குற்றச்சாட்டு: இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சமூகநீதிப் பாதுகாப்பு எனக் கூறிய கோ. கருணாநிதி, ஜாதி அமைப்பை எதிர்க்கத் துணிவில்லாதவர்களே இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாக கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ரூ.100 பணமோசடியில் ரூ.1 மட்டுமே அதிகாரிகளால் மீட்கப்படுகிறது: தலைமை நீதிபதி சூர்யகாந்த் விமர்சனம்: பொருளாதாரக் குற்றவாளிகளின் நுட்பமான செயல்பாடுகள் மற்றும் நாடுகளிடையேயான ஒத்துழைப்பின்மை காரணமாக, மோசடி செய்யப்பட்ட ஒவ்வொரு ரூ.100-க்கும் ரூ.1 மட்டுமே அதிகாரிகளால் மீட்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.

குடந்தை கருணா

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *