நேபாள கொடும் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பலி! மோடி வெளிநாடுகளில் கொண்டாட்டம்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக 31 இந்திய நாட்டு மக்கள் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாகச் சிக்கி உயிரிழந்த நிலையில். இந்தியப் பிரதமர் மோடி, வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் – கொண்டாட்டம்!

இந்த நூற்றாண்டின் மிக மோசமான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் நேபாள பெரு வெள்ளம், அந்நாட்டின் பல மாகாணங்களில் பெரும் சேதத்தையும், அழிவையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் கணிசமானோர் இந்தியர்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் குறித்த எந்தவொரு விவரமும் கிடைக்காமல், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது தெரியாமல் ஒன்றிய வெளியுறவுத்துறை திணறி வருகிறது. தங்களது உறவுகளைப் பற்றிய தகவல்களை அறியத் துடித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகளுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அண்டை நாடுகள் மற்றும்  பன்னாட்டுச் சமுதாயம் இந்த சோகத்தில் துக்கம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக மத்திய ஆசிய நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரைச் சென்றடைந்த அவருக்கு, விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் சார்பில், நடன நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் கடந்த 12 ஆண்டுகளாக வெளிநாட்டுப் பயணங்களின் போது ஒரே பாணியிலான வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. எனினும், நேபாள வெள்ளத்தில் சிக்கிய பல நூற்றுக்கணக்கான இந்தியர்களின் நிலை என்னவென்றே தெரியாமல் உறவினர்கள் தவித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற கலாச்சாரக் கலை நிகழ்ச்சிகளையும், குழந்தைகள் நடனத்தையும் கண்டுகளித்தது பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *