சென்னை, செப். 1– தமிழ்நாட்டில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் திருத்தப்பட்ட புதிய கட்டண விகிதம் இன்று (1.9.2026) அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையத்தின் (NHAI) கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு இருமுறை கட்டணங்கள் மாற்றி யமைக்கப்படுவது வழக்க மான நடைமுறையாகும். அதன் ஒருபகுதியாக, தற்போது விக்கிரவாண்டி, செங்குறிச்சி, வாலாஜா பாத், சமயபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
வாகனங்களின் வகையைப் பொறுத்து ஒரு வழிப் பயணம் மற்றும் மாதாந்திரக் கட்டணம் ரூ. 5 முதல் ரூ. 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கான கட்டணம் ரூ. 240-லிருந்து ரூ. 250-ஆக அதிகரிக் கப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்களுக் கான கட்டணம் ரூ. 380-லிருந்து ரூ. 400-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சரக்கு வாகன மற்றும் பேருந்து போன்ற வாகனங்கள் ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் போது, தற்போதுள்ள கட்டணத்தை விட ரூ. 15 வரை கூடுதலாக வசூலிக் கப்படும்.
இந்தத் திடீர் கட்டண உயர்வால் சரக்கு வாகனங் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் மட்டுமின்றி, அத்தியா வசியப் பொருட்கள் போக்குவரத்து செலவு அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
