அகஸ்தீஸ்வரம், ஆக. 19- கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் 16. 8.2026 ஞாயிறு மாலை 6 மணிக்கு கன்னியாகுமரியை அடுத்த மந்தாரம்புதூரில் வைத்து மாவட்டக் கழக;த தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டக் கழக;ச செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக மகளிர் பாசறை மாவட்ட தலைவர் மஞ்சு குமாரதாஸ் வரவேற்பு உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்உரத்தநாடு இரா. குணசேகரன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் ம. தயாளன், துணைத் தலைவர் ச. நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மா. மணி, மாவட்ட மகளிர் அணித தலைவர் சு.இந்திரா மணி, தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்ஸ், கோட்டாறு பகுதி கழகத் தலைவர் ச.ச.மணிமேகலை, திராவிடர் கழக தோழர்கள் ஞா.பிரான்சிஸ், அரும்பாக்கம் தாமோதரன், மந்தாரம் புதூர் பொன்முடி, திராவிடர் கழக மாணவர் கழகப் பொறுப்பாளர் இனியன் உட்பட பலர் பங்கேற்றனர்
மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 148 ஆவது பிறந்தநாள் எழுச்சியுடன் கொண்டாடுவது எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
திராவிடர் கழக கருத்துக்களை மக்களுடன் கொண்டு சேர்க்கும் வகையில் பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
