மோடியின் தொகுதியான வாரணாசி விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு இரு ஊழியர்கள் காயம்; பயணி கைது!

சிறப்பு புத்தக சலுகைகள்

வாரணாசி, ஆக. 16- உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விமான நிலையத்தில் துப்பாக் கிச்சூடு நடத்தப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரணாசியில் இருந்து மும்பைக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கி யால் திடீரென சுட்டு உள்ளார். இதில் சரக்கு கையாளுகை மற்றும் அதன் தொடர்புடைய சேவை நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் படையினர், உடனடியாகச் செயல்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைப் பிடித்து கைது செய்தனர்.

காயமடைந்த இரண்டு ஊழியர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயர் பாதுகாப்பு மண்டலமான விமான நிலையத்திற்குள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் (CISF) பலகட்ட சோதனை களையும் தாண்டி பாதுகாப்பு விதிகளை மீறி அந்த பயணி எவ்வாறு துப்பாக்கியை எடுத்துச் சென்றார் என்பது குறித்து விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *