பெரியார் திடலில் 1974ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் தொடங்கப்பட்டு ஜாதி ஒழிப்புப் பணியில், சுயமரியாதைத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘ஜாதி கெடுத்தவள்’ என சிலரால் வாழ்த்துப் பெற்ற திருமகள் இறையன் இயக்குநராக இருந்தபோது அதிகளவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மதுரை நட்பு தமிழ் வட்டம் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு ஜாதி மறுப்புத் திருமணங்களை அதிக அளவில் நடத்திடும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்திற்கும், அதன் இயக்குநர் பசும்பொன்னுக்கும் ‘ஆளுமை மகளிர்’ விருது வழங்கப்பட்டது.
அதனையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பசும்பொன் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: இணையர் இசையின்பன் (சென்னை, 13.8.2026)
