ஹோர்முஸ் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது டிரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு

சிறப்பு புத்தக சலுகைகள்

தெஹ்ரான், ஆக. 14- ‘ஹோர்முஸ் நீரிணைப் பகுதி எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது’ என்று ஈரான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை முழுவதும் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், 12.8.2026 அன்று தெரிவித்ததையடுத்து, ஈரானின் இந்த மறுப்பு வெளியாகியுள்ளது.

அண்மையில் நியமிக்கப்பட்ட ஈரானின் பாசிஜ் துணை ராணுவப் படையின் தலைமைத் தளபதி ஹூசைன் தாயிப் இதுகுறித்து கூறுகையில், “மேற்காசியாவில் ஈரானின் செல்வாக்கைச் சீா்குலைக்கும் நோக்கில், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றொரு போரைத் தொடுத்தது. ஈரானிடம் விமானப் படையோ அல்லது கடற்படையோ இல்லை என்று அவா்கள் கூறிக்கொண்டாலும், மீண்டும் ஒருமுறை அவா்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனா். ஹோர்முஸ் நீரிணை ஈரானின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் தான் இருக்கிறது. ஈரான் முழு மையான பாதுகாப்புடன் தனது பாதையில் தொடா்ந்து பயணிக் கிறது” என்றார்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப். 28-இல் தொடங்கிய கூட்டுப் போரையடுத்து, உலகின் அய்ந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. அதன் தொடா்ச்சியாக, ஈரான் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள்மீது அமெரிக்கா கடல்வழி முற்றுகையை விதித்தது. அதேநேரம், பாரசீக வளைகுடாவில் பிற துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களின் சுதந்திர மான போக்குவரத்தைப் பாதுகாப்பதாக வும் அமெரிக்கா கூறியிருந்தது.

பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூனில் அமெரிக்கா-ஈரான் ஓா் இடைக்கால ஒப்பந்தத்தை எட்டின. அதில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதோடு, வளைகுடா பகுதியில் கப்பல் போக்குவரத்து விரைவில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ஒப்பந்த விதிமுறைகளை மீறி செல்லும் கப்பல்கள்மீது ஈரான் மீண்டும் சிறிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியதால், சில வாரங்களிலேயே அந்த ஒப்பந்தம் முறிந்தது. இதனால், வளைகுடா பகுதியில் கப்பல்களைத் தாக்கும் ஈரானின் திறனைக் குறைக்கும் நோக்கில் அதன் தென் மாகாணங்களில் அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்கியது.

இதற்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடு குறித்து ஓமனுடன் ஈரான் பேச்சுவார்த் தையைத் தொடா்ந்து வருகிறது. ஆனால், “ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கு ஓமனுடனான ஒப்பந்தம் மட்டுமே போதாது. ஈரானுக்கு அமெரிக்கா வழங்க வேண்டிய இழப்பீடு உள்ளிட்ட பிற நிபந்தனைகளைப் பொருத்தே அது அமையும்” என்று ஈரான் திட்டவட்டமாக உள்ளது. இவ்வாறு ஹோர்முஸ் நீரிணை திறப்பு குறித்து நிலவும் நிச்சயமற்ன்மையால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் தினசரி ஏற்றம் கண்டு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *