குத்துச்சண்டைக் களத்தில் கொடிகட்டிப் பறக்கும் திருச்சி பெரியார் பள்ளி மாணவன் மண்டல அளவில் முதலிடம் பிடித்து சாதனை!

சிறப்பு புத்தக சலுகைகள்

திருச்சி, ஆக.13- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர் ஏ.கவிநிதி, அண்மையில் மண்டல அளவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று, தனது தன்னிகரற்றத் திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தளராத உழைப்பையும், விடாமுயற்சியையும் கொண்டு இந்தச் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ள மாணவர் கவிநிதி, அடுத்ததாக நடைபெற இருக்கும் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

பள்ளியின் புகழை விளையாட்டுத் துறையில் உயரச் செய்துள்ள மாணவர் கவிநிதி அவர்களுக்கும், அவருக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளித்து வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியர்கள் கோகுல் மற்றும்  சவுமியா ஆகியோருக்கும் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் மற்றும் சக மாணவச் செல்வங்கள் அனைவரும் தங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டதோடு, வரவிருக்கும் மாவட்ட அளவிலான போட்டி யிலும் அவர் வெற்றி வாகை சூடி பள்ளிக்குப் பெருமை சேர்க்க தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *