மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மேட்டூர், ஆக. 12– மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (12.8.2026) காலை நிலவரப்படி வினாடிக்கு 8,689 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.37 அடியில் இருந்து 79.78 அடியாக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரம் நீர் வரத்து: வினாடிக்கு 8,689 கன அடி நீர்மட்டம்: 79.78 அடி நீர் இருப்பு: 41.73 டி.எம்.சி  நீர் திறப்பு: குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி மழை அளவு: அணைப் பகுதியில் 6.8 மி.மீ மழைப் பதிவு  அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், குடிநீர் பயன்பாட்டிற்காகத் தொடர்ந்து வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தெருக்களுக்கு

ஜாதிப் பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும்!

உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக.12– தமிழ்நாட்டில் தெருக்களுக்கு ஜாதிப் பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி
என்.ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் துறையினர் பதிவு செய்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு நேற்று (11.8.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் தகவல் அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட ஜாதிப் பெயரை கொண்ட தெரு என்று குறிப்பிட்டு இருந்தது. இதை படித்து பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.

“2026-ம் ஆண்டிலும் இப்படி ஜாதிப் பெயரை குறிப்பிட்ட தெரு உள்ளதா? தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கவேண்டும் என்று 1998ஆம் ஆண்டே தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பல உத்தரவுகளை உயர்நீதிமன்றமும் பிறப்பித்துள்ளன. அப்படியிருந்தும், ஒரு தெருவுக்கு குறிப்பிட்ட ஜாதிப் பெயரை வைத்து எப்படி அழைக்க முடியும்? இதனால்தான் அண்மையில், ஆதி திராவிடர் நலத்துறையை, சமூக நீதித்துறை என்று தமிழ்நாடு அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் தெருக்களுக்கு ஜாதிப் பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும்” என்று கருத்து கூறினார்.

பின்னர், “தமிழ்நாடு முழுவதும் தெருப் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கிறேன். இந்த வழக்கை தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிடும்படி உயர்நீதிமன்ற பதிவாளருக்கு பரிந்துரைக்கிறேன்” என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *